ரஞ்சனுடன் பேசாமை எனது அதிர்ஷ்டம் – பிரதமர்

mahinda
mahinda

ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் தான் பேசியதில்லையெனவும், எனது அதிர்ஷ்டத்தினால் தப்பி விட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக் தெரிவித்தார்.

நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன் வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே என்னால் நடந்தது. தவறுதலாக நானும் பேசியிருந்தால் நிச்சயமாக அதனையும் வெளியே விட்டிருப்பார்கள்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளின் மூலம் கடந்த அரசாங்கத்தில் நீதிமன்றத்தின் சுயாதீனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.