ஐ.தே.க தலைமை தொடர்பில் இழுபறி நிலை!

unp
unp

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை தீர்மானிப்து தொடர்பில் நேற்று (9) இடம்பெற்ற கூட்டத்திலும் எதுவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு
கட்சித் தலைமையினை வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டிருந்து.

கரு ஜயசூரிய கட்சித்தலைமையை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவருடனான கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனினும் இறுதியில் கட்சித் தலைமையினை தீர்மானிப்பது தொடர்பில் வாக்கெடுப்பினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 16ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும், மத்திய செயற்குழுக் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.