வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌவி ஆகியோரை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
இச்சந்திப்புகள் நேற்று (9) மாலை இடம்பெற்றன.
வட மாகாணத்தின் நிலமைகள் தொடர்பில் மதத் தலைவர்களிடம் கேட்டறிந்த ஆளுநர், தன்னால் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் பணிகள் தொடர்பில் எடுத்துரைத்தார்.
கடந்த 2ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்ற ஆளுநர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.
இந்நிலையில் இந்து, பௌத்த மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைச் சந்தித்து நேற்று ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.