பல்கலை சம்பள முரண்பாட்டிற்கு விரைவில் தீர்வு – பிரதமர்

00
00

பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் சம்பள முரண்பாடு தொடர்பில் தீர்வினை பெற்றுத் தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் நேற்றைய நாள்(10) இடம்பெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் சம்பள முரண்பாடு சம்பந்தமாக விரிவாக ஆராய்வது தொடர்பில் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளருக்கும் ஆலோசனை வழங்கினார்.