சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 229 சிகரட்டுக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சிலாபம்-சிங்ஹபுர பகுதியில் வைத்து மகிழூர்தி ஒன்றினை சோதனைக்கு உட்படுத்திய போதே மேற்படி சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.