தாமரை கோபுர திறப்பு விழாவில் நினைவு முத்திரை வெளியீடு

 கோபுரம்
கோபுரம்

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு நாளை மறுதினம் 16 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில் தாமரை கோபுர திறப்பு விழாவுடன் 45 ரூபாய் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்