விஜயகலாவிடமிருந்து 15கோடி இலஞ்சம் கேட்ட சுமந்திரன் – சிறீதரன் குற்றச்சாட்டு

sri
sri

கொழும்பில் தமிழரசு கட்சியூடாக களமிறங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள விஜயகலா மகேஸ்வரனிடம், கொழும்பில் விஜயகலாவுக்கு சொந்தமான 15கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஆதனம் ஒன்றினை தனது பெயருக்கு மாற்றித்தருவதாக சம்மதித்தால் விஜயகலா மகேஸ்வரனை கொழும்பில் தமிழரசு கட்சியூடாக களமிறக்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாக சுமந்திரன் உறுதி அளித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கையில், தமிழரசுக் கட்சிக்குள் விருப்பு வாக்குகளுக்கான மோதல் உச்சம் பெற்றுள்ளது. இந்த மோதலின் உச்சமாக தனது சக தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்பான பதிவொன்றைத் தனது இணையத்தில் பதிவேற்றியுள்ளார் சிறீதரன்.

அந்தப் பதிவில் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களோடு, தமிழ் மக்களுக்கிடையில் சாதி மற்றும் பிரதேசவாதத்தை தூண்டும் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. சிறிதரனின் ஊடகம் வெளியிட்டுள்ள இந்தப் பிரிவினைவாத கருத்துக்களுக்கு எதிரான விரிவான கட்டுரை ஒன்று தமிழ்க் குரலில் விரைவில் வெளியாகும்.