தடைகளையும் மீறி பிணைமுறி விசாரணைகளை மேற்கொண்டேன் – மைத்திரி

ranil my3
ranil my3

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கீடுகள் செய்ததாகவும் எனினும் தான் தனது கடமைகளை நிறைவேற்றியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு எதிரான மோசடி விசாரணைகளைத் தொடங்கினார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி விவரங்களை ஆய்வு செய்வதற்காக அந்த பொலிஸ் அதிகாரிகள் பணிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும், தடைகள் இருந்தபோதிலும் நான் விசாரணைகளை மேற்கொண்டேன். அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து ஒப்படைக்க ஆவணமாக்கல் பணிகளை நான் செய்தேன்” என தெரிவித்தார்.