மட்டக்களப்பில் அம்புயூலன்ஸ் வண்டியில் குழந்தை பிரசவித்த தாய்!

Ambulance
Ambulance

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்திலுள்ள தும்பாலை பிரதேசத்தினைச் சேர்ந்த தாய் ஒருவர் நேற்றிவு (11) அம்பியூலன்ஸ் வண்டியில் குழந்தை பிரசவித்துள்ளார்.

குறித்த தாயிற்கு பிரசவ வலி ஏற்பட்ட போது 1990 இலவச அம்பியூலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டுள்ளது.

இதன் போது கரடியனாறு பிரிவிலுள்ள அம்பியூலன்ஸ் வண்டி வேறு சேவையில் ஈடுபட்டதனால் வவுணதீவு நிலையத்தின் அம்பியூலன்ஸ் வண்டி விரைந்து சென்றுள்ளது.

குறித்த பெண்ணை ஏற்றிக்கொண்டு சுமார் 50 மீற்றர் தூரம் செல்லுகையில் குழந்தை பிறப்பதற்கான வலி எடுத்து, பெண் குழந்தை ஒன்று அம்பியூலன்ஸ் வண்டியில் பிறந்துள்ளது.

தன்னையும் தனது பெண் குழந்தையையும் சுகமான முறையில் எதுவித ஆபத்துமில்லாமல் பிரசவம் பார்த்த வவுணதீவு நிலையத்தின் 1990 சுவசெரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையின் உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளை குறித்த தாயார் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த தாயும் குழந்தையும் கரடியனாறு வைத்தியசாலையில் ஆரோக்கியமாக உள்ளனர்.