ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளின் ஆதரவு பெற்றுவிட்டதாக சஜித் தெரிவிப்பு

sajith 1
sajith 1

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுகொள்ளுமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவித்திருந்தார்.

இதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளை சந்தித்து தமக்கான ஆதரவை திரட்டி வருகின்றார்.

இந்நிலையில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளை அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் குறித்து தெரிவிக்கையில் ”ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் தினங்களில் அவர்களையும் சந்தித்து எமக்கான ஆதரவுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றும் கட்சிக்குள் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது” என்றும் கூறினார்.