மட்/ சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 26 ஆவது கிறிக்கட் சுற்றுப் போட்டி நேற்று சனிக்கிழமை (14.09.2019) சிவானந்தா மைதானத்தில் நடைபெற்றது.
சுமுகமான முறையில் சென்று கொண்டிருந்த இப்போட்டியில் பார்வையாளர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மைதான வாசல் கதவினை பூட்டி விட்டு கைகலப்பினை அடக்க அங்கு நின்ற அனைவர் மீதும் பாரபட்சமின்றி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயர்தரம் கற்கும் மாணவர் ஒருவர் கடுமையான முறையில் பொலிசாரால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.