தெமதகொட பகுதியில் வெடிப்புச்சம்பவம்- இரண்டு பெண்கள் காயம்

explotion
explotion

தெமதகொட மகாவிலா பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். தெமதகொட – மகாவிலா சந்தி – சமந்தாவத்தை வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு பெண்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத்துறை விரைந்துள்ளது.