உறுப்புரிமை நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை – எஸ்.பி தெரிவிப்பு

SP
SP

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டால் அதற்கு எதிரானு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஒழுக்காற்று நடவடிக்கையைக் கருத்திற்கொண்டு தமது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்ய நீண்ட காலம் எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.