யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பௌத்த மதத்தை குறிக்கும் கொடி நடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் நகரில் வழமையாக உலாவும் மனநலம் குன்றிய ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள கற்களை சேர்த்து குவித்து கொடியினை அதிலே கட்டுவதை தாங்கள் கண்டதாக வர்த்தகர் சிலர் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அந்தக் கொடி அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.