மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா

DSC 0774
DSC 0774

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்துக்களும் நேற்றைய தினம் (15) தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடினர்.

மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதோடு,விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதற்கமைவாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் பங்குத்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் நேற்று காலை 5.30 மணியளவில் இறைவன் அளித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் பொங்கி விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறித்த பொங்கல் நிகழ்வானது மறைமாவட்டத்தில் உள்ள இளைஞர்,யுவதிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.

மேலும் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களிலும் விசேட பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றது.