வல்வெட்டித்துறையில் நேற்று (15) நடைபெற்ற பட்டத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இடங்களிலிருந்தும் வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர்.
தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கள் திருநாளில் வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் பட்டத் திருவிழா இடத்பெற்றது.
இப் பட்டத் திருவிழாவில் பல வகையிலான பட்டங்கள் பறக்க விடப்பட்டிருந்தன. இதில் தாளவாத்திய குழுமம் பட்டம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதன் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.