உயிரிழந்த மாணவிகளின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு

Death
Death

அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகள் மூவரினதும் சடலங்கள் நேற்று பகல் (15) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, சடலங்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

டோகா மற்றும் தெஹ்ரானிலுள்ளஇலங்கை தூதுவராலயங்கள் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டன.

இதற்கான செலவுகளை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.