ரஷ்யா நாட்டின் பிரதமர் திமித்ரி மெத்வடேவ் தனது பதவியை நேற்று (15) இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்ட புதின், மெத்வடேவ் சேவையை பாராட்டினார்.
மேலும், புதிய அமைச்சரவை அமைக்கும் வரை மெத்வடேவ் அமைச்சரவையை தொடர்ந்து செயல்பட வேண்டும் என அமைச்சர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
திமித்ரி மெத்வடேவ் கடந்த 2012ம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.