நீதிமன்ற ஆணையை மதிக்காத பாதுகாப்பு செயலரின் நிறுவனம் !

1 tne
1 tne

ரோயல் இன்ஸ்டி டியூட் எனப்படும் தனியார் கல்வி நிறுவனத்தின் புதிய கிளைகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அந்த நிறுவனம் புதிய கிளை ஒன்றை ஆரம்பித்துள்ளது .

இந்த நிறுவனத்தின் நிர்வாகப்பணிப்பாளர்களில் ஒருவராக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன பதவி வகிக்கிறார் .

நகர் அபிவிருத்தி அதிகார சபை சிறீ ஜெயவர்த்தன புர மாநகர சபை என்பன உயர் நீதிமன்ற உத்தரவின் கண்காணிப்பாளர்களாக இருந்த போதிலும், இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு உயர்மட்டத்தில் இருந்துவரும் அழுத்தங்கள் காரணமாக இருப்பதாக அறியப்படுகிறது.

அரசியல் வாதிகளின் அழுத்தங்கள் காரணமாக நீதிமன்ற ஆணைகள் செயற்ப்படுத்தப்பட முடியாமல் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

நிரோதா பண்டார என்ற பெண்மணி இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடதக்கது.