கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Murder 7
Murder 7

எட்டியாந்தோட்டை – புலத்கொஹூபிட்டி – மேல் உடுவ – நாஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்ப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த 45 வயதுடைய நாஹேன பகுதியை சேர்ந்த நபருக்கும் அவருடைய சகோதரருக்கும் இடையில் இடம்பெற்ற வாயதர்க்கம் மோதலாக மாறியதை தொடர்ந்தே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் குறித்த பகுதியிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.

அவரை கைது செய்வதற்கு காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.