பாகிஸ்தான் பனிப்பொழிவு – 111 பேர் பலி

pakistan1
pakistan1

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் அங்குள்ள 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது பேரிடர் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.