புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பத்திரிகை அறிவிப்பு நாளை

mahinda desapriya
mahinda desapriya

2020 ஆண்டிற்குரிய புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கான பத்திரிகை அறிவிப்பு நாளை (17) தேசிய பத்திரிகைகளில் வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு 58ம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் திருத்த சட்டத்தின் 1981ம் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.