மன்னார் பெரியமடு ஆரம்ப பாடசாலையில் அதிபர் இமாம் ஹன்பல் அவர்களின் தலைமையில் இன்று (16) கால்கோல் விழா நடைபெற்றது.
பிரதம அதிதியாக மடுவாலய ஆசிரிய ஆலோசகர் பதிவாளர் ஏ.சகாயராஜா கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் இவ்வருடம் தரம் ஒன்றில் கல்விகற்க நுழையும் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மாலை அணிவித்து மேள வாத்தியத்துடன் வரவேற்று வந்தனர்.
அதனை தொடர்ந்து ஆரம்ப பாடசாலை அரங்க மண்டபத்தில் நிழ்வுகள் நடை பெற்றன.
அதிபர் ஹன்பல் அவர்களின் வரவேற்புரையினை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு பிரதம அதிதி அவர்களின் சிறப்புரை இடப்பெற்றது.
இதேபோன்று பெரியமடு அரசினர் முஸ்லீம் ஆரம்ப பாடசாலையிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.