மன்னார் மாவட்ட அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்வு

IMG 5871
IMG 5871

மன்னார் மாவட்டத்தில் இவ் வருடம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் நிதி ஓதுக்கீடுகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று (16) மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன் போது மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர்கள் உட்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகவும் ஆராயப்பட்து.

வீதி அபிவிருத்தி, சுகாதாரத்திட்டத்தை மேம்படுத்துதல், விவசாயம், மீன் பிடி நடவடிக்கைளை ஊக்குவித்தல் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறித்த திட்டங்கள் தொடர்பாகவும், ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்து எதிர்வரும் 24ம் திகதிக்கு முன்னர் திட்டத்தை சமர்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.