விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட பணிப்பு!

1
1

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையயத்திற்கு வருகை தரும் பயணிகள் பாதிப்புறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் (16) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டபோது இதனை வலியுறுத்தினார்.

குடிவரவு குடியகல்வு சோதனை நடவடிக்கைகளுக்கு போதியளவிலான அதிகாரிகளை கடமைக்கு அமர்த்தி பயணிகளுக்கு ஏற்படும் தாமதங்களை இயன்றளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்போது, பயணிகளுடனும், அதிகாரிகளுடனும் விமான நிலைய ஊழியர்களுடனும் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.