வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கை

vavuniya0
vavuniya0

வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் ஏ9 வீதியில் நேற்றைய தினம் (16) திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் செலுத்திய பல சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளினால் வாரம் ஒருமுறை விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வீதி ஒழுங்குகளை மீறிய வாகன சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

இதேவேளை பாதசாரிகள் மற்றும் வாகனசாரதிகளிற்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக தெளிவூட்டல்களையும் பொலிஸார் வழங்கியிருந்தனர்.