லயன் எயார் விமானத்தில் பயணித்த பயணிக்கு இன்புளுவென்சா நோய் தாக்கம் !

images 13
images 13

ஐ.டி.எச் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெளிநாட்டவருக்கு இன்புளுவன்சா நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக லயன் எயார் ரக விமானம் ஒன்று கடந்ததினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் அந்த இரு பயணிகளும் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில், அவர்களின் சடலங்களை இந்தோனேசியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், குறித்த விமானத்தில் பயணித்த மற்றுமொரு பயணி காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஐ.டி.எச் ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவரின் ரத்த மாதிரிகள் பொறளையில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அவருக்கு இன்புளுவென்சா தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.