சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காரிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைப்பு

TIKB3230
TIKB3230

கோப்பாய் சமுர்த்தி வங்கி முகாமையாளர் வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பரின் கல்வியங்காட்டில் உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு (16) 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டார் உறக்கத்தில் இருந்துள்ளனர். எனினும் சம்பவத்தை உணர்ந்த வீட்டாரும் அயலவர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.