சித்த சுவாதீனமற்ற தாயுடன் காட்டில் உறங்கிய சிறுமி!

5 2
5 2

சித்த சுவாதீனமற்ற தாயுடன் வீட்டில் உறங்காமல் காட்டில் இரவுப்பொழுதைக் கழித்து வந்த 8 வயது சிறுமியையும் அவரது தாயையும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை ஹல்பே பிரதேசத்தில் வசிக்கும் இவர்களை பிரதேசவாசிகளின் உதவியுடன் நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் பலாங்கொடை மஜிஸ்திரேட் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை எஹலியகொடை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அவர்களை வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் எதிர்வரும் 21ம் திகதி இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிவான் பணிப்புரை விடுத்துள்ளார்.