பொலனறுவையில் களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி

Maithiripala
Maithiripala

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் களமிறங்குவாரென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அத்துடன் இம்முறை சகல மாவட்டங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்குவார்களெனவும் அவர் தெரிவித்தார்.