தேர்தலைப் புறக்கணிக்க ரணில் சதி – வாசுதேவ குற்றச்சாட்டு!

Vasudeva Nanayakkara
Vasudeva Nanayakkara

பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க தேர்­தலை பிற்போடும் சதித்­திட்­டமே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரிவித்துள்ளார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,
பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஆரம்­பத் தில் இருந்தே ஜனா­தி­பதி தேர்­தலை பிற்­ப­டுத்தும் நோக்கில் ஒரு­சில தர­கர்­க­ளுடன் இணைந்­து­கொண்டு சதித்­திட்­டங்­களை மேற்­கொண்டு வந்­தி­ருந்தார்.

தற்­போது ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வது தொடர்பில் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றார். நீதி­மன்­றத்­துடன் இந்த நட­வ­டிக்­கையை சிக்­க­லாக்கி இதன் மூலம் தேர்­தலை பிற்­ப­டுத்­து­வதே அவரின் திட்­ட­மாகும்.

பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு பிர­தான கார­ண­மாக இருப்­பது, சஜித் பிரே­­ம­தா­ச­வுடன் அவ­ருக்கு இருக்கும் பிரச்­சி­னை­யாகும். அத்­துடன் ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி தோல்­வி­ய­டை­வது நிச்­ச­ய­மாகும். அதனை தடுப்­ப­தற்­கான இறுதி முயற்­சி­யா­கவே இதனை மேற்­கொள்­ளப்­போ­கின்றார். அதி­கா­ரத்தை மாற்றும் தேர்­த­லா­கவே ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­றப்­போ­கின்­றது. அதனால் மக்கள் மிகவும் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும். அவரின் இந்த நட­வ­டிக்­கைக்கு அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்..