இலங்கை இரட்டையர்களின் சாதனை முயற்சி – 5000 இரட்டையர்கள் ஓரிடத்தில்!

twins
twins

இரட்டையர்கள் ஒன்று கூடுதலில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் இன்று (20) இலங்கை இரட்டையர்கள் சுகதாச அரங்கில் ஒன்று கூடவுள்ளனர்.

இலங்கை இரட்டையர் சங்கம் இதற்கான அழைப்பினை விடுத்துள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் தேசிய அடையாள அட்டை, பிரதேச செயலாளர் அல்லது சமாதான நீதிவானின் ஒப்புதலுடன் பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9.30 மணி முதல் இந்த ஒன்றுகூடல் இடம்பெறுகிறது.

தற்போது அதிக இரட்டையர் ஒன்று கூடலில் 3,900 இரட்டையர் இணைகள் ஒன்று கூடி தைவான் வசம் உலகசாதனை உள்ளது.

இன்று சுகததாச அரங்கில் 5,000 இரட்டையர் இணைகளை இன்று ஒன்று திரட்ட எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இரட்டையர்கள் சங்கத்தில் தற்போது, 28,000 இரட்டையர்கள் அங்கம் வகிப்பதாக இலங்கை இரட்டையர் சங்கம் அறிவித்துள்ளது.