மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட விசேட அறிக்கை

1 fff
1 fff

மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் எந்தவொரு உடன்படிக்கையையும் என் அரசாங்கம் செய்ய மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று அவரால் விடுக்கப்பட்ட விசேட அறிவித்தலொன்றில் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினதும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தினதும் வித்தியாசம் அதுவாகும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு குழுக்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.