நியமனங்களை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டை!

anithan
anithan

பட்டதாரிகள் அரச நியமனத்தை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பட்டாதாரிகள் சங்கத்தலைவர் அணிதன் தலைமையில் கையெழுத்து இடும் நிகழ்வு இன்று (21) காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றிலிருந்து மூன்று நாட்கள் நடைபெறும் இவ் கையெழுத்து நிகழ்வில் பட்டதாரிகள் அனைவரும் பங்குகொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றார்கள்.

கையெழுத்து படிமத்தினை முன்னுரிமைப்படுத்தி அதில் உள்ள பட்டதாரிகளின் நியமனங்களை துரித்தபடுத்துமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு கையளிக்கப்படவுள்ளது.