உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிபதி ஐ.என்.றிஸ்வான் இன்று (21) உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான பிணை கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தமையின் காரணமாக அனைத்து சந்தேகநபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.