மன்னார் நோக்கி பயணித்த கூலர் வாகனம் குடைசாய்வு – சாரதி கவலைக்கிடம்!

DSC 1278
DSC 1278

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கழிவு மீன்களை கொண்டு சென்ற கூலர் வாகனம் ஒன்று இன்று (21) அதிகாலை மன்னார் பிரதான பாலத்தில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது காயமடைந்த வாகனத்தின் சாரதி மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த கூலர் வாகனம் யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று இரவு (20) மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி பயணித்துள்ளது.

இதன் போது மன்னார் பிரதான பாலத்தினுடாக பயணித்த குறித்த கூலர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகாமையில் காணப்பட்ட சுமார் 5 தடைகளை உடைத்து வீதியை வீட்டு பாய்ந்து மீண்டும் வந்த திசையை நோக்கி தலைகீழாக குடைசாய்ந்துள்ளது.

குறித்த கூலர் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.