புல்மோட்டை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் 77 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றிற்கு சென்று 5000 ரூபா நாணயத்தாளை மாற்றித்தருமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நாணய தாள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தினால் குறித்த நிதி நிறுவனத்தின் முகாமையாளரினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் 13 கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.