பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகனை காணவில்லை – தாய் முறைப்பாடு

human
human

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை என தெரிவித்து தாய் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று (21) முறைப்பாடு செய்துள்ளார்.

அரியாலை பூம்புகாரை சேர்ந்த 26 வயதுடைய தனது மகனையே காணவில்லையென தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் அண்மையில் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து குறித்த இளைஞன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் பொலிஸாரிடம் தனது மகன் எங்கே?என கேட்கச் சென்றுள்ள வேளை பொலிஸார் தாம் அவரை கைது செய்யவில்லை என மறுத்துள்ளதாக தாயார் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தாய் காணாமல் போயுள்ள தனது மகனை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.