சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் மன்னாரில் கருத்தமர்வு இடம்பெற்றது.
கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று (22) காலை 9.30 மணியளவில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் நடைபெற்றது.
கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் அதன் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வில் மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், மற்றும் கிராம மட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது ஊடகங்கள் ரீதியாக வெளி வருகின்ற செய்திகள் தொடர்பாகவும் அதனால் ஏற்படுகின்ற சாதக, பாதக நிலைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மதங்களுக்கிடையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.