என்னை காப்பாற்றவே கொலை செய்தேன் – பெண் கொலையாளி வாக்குமூலம்

IMG 8375
IMG 8375

கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை தாக்கியதாக கொலையாளி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் ரத்தினம் குகேந்திரன் (56) வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் கொலையாளி கைது செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்து அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில்,

“கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்த அவர் என்னை வன்புணர்வதற்கு முயற்சித்தார். அதனால் என்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கினேன். அவர் உயிரிழந்துவிட்டார்.

அதன்பின்னர் அவரது சடலத்தை எடுத்துச் சென்று வீதியில் போட்டேன்” என்று அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.