மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற வாகன விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தினை ஏற்படுத்தி உழவு இயந்திர சாரதி வாழைச்சேனைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
துவிச்சக்கர வண்டியில் வயலுக்குச் சென்று கொண்டிருந்த நபரை மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதிச் சென்றுள்ளதனால் தலைப்பகுதி முழுமையாகச் சிதைவடைந்துள்ளது.
உயிரிழந்தவர் கிரான் – விஷ்ணு கோயில் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முத்துவேல் யோகநாதன் என பொலிஸார் தெரிவித்தனர்.