இலங்கைக்கு வருகை தரும் சீன சுற்றுலாப் பயணிகளுக்கான விசா வழங்கும் நடவடிக்கை சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் அதிகம் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மொழிப் பிரச்சினை காரணமாக சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கான விசாவினை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.