முல்லைத்தீவு கணேசபுரம் கிராமத்தில் தரமான விதைநெல் உற்பத்தி வயல்விழா!

1 6 1
1 6 1

முல்லைதீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் கீழ் ஒட்டுசுட்டான் கணேசபுர விவசாய போதனாசிரியர் பிரிவில் 05 ஏக்கரில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதை நெல் உற்பத்தித் திட்டதின் வயல் விழா நிகழ்வு இன்று (23) நடைபெற்றது.

2019ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் விவசாயத்திணைக்களத்தால் 2019/2020 பெரும்போகத்தில் விதை நெல் உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தின் அலுவலர்கள் விவசாயப் போதனாசிரியர்கள் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் முதியவர்கள், பெண்கள், விவசாயப் போதனாசிரியர்கள் என பலரும் பாரம்பரிய முறையில் அரிவாள் கொண்டு நெல் அறுவடை செய்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

இத் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தரமான விதை நெற்கள் வருகின்ற சிறுபோகத்தில் விவசாயிகளின் தேவைகளிற்கு பெரிதும் உதவும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.