மட்டக்களப்பின் முக்கிய ஊடகவியலாளர்களிற்கு மரண எச்சரிக்கை!

warning
warning

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அநாமதேய துண்டுப்பிரசுரம் மட்டு ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மட்டு ஊடக அமையத்திற்குள் ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர் சென்று அலுவலகத்தை திறந்த போது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

வீசப்பட்ட துண்டு பிரசுரத்தில்,

எச்சரிக்கை! எச்சரிக்கை! என்ற தலைப்பில், இவர்கள் தான் வெளிநாட்டு புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ். இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் செ.நிலாந்தன், பு.சசிகரன், ந.நித்தியானந்தன், வ.சக்திவேல், கு.சுபோஜன் மற்றும் சு.குணலிங்கம் ஆகியோர்களின் நிழற் பிரதிகளை வட்டமாக அடையாளப்படுத்தி இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம் என துண்டுப்பிரசுரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒன்றியத்தினர் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.