முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து சிறையிலடையுங்கள் !

9 d
9 d

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

‘முன்னாள் பாதுகாப்புச் செயலாளரோ அல்லது பொலிஸ் மா அதிபரோ அந்த தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியதில்லை.

பெஜட் வீதி அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்துவரும் முன்னாள் ஜனாதிபதியே இதற்கு பொறுப்புக்கூர வேண்டும்.சிறிசேனவுக்கு இப்போது ஜனாதிபதிக்கான சிறப்புரிமை இல்லை.

எனவே அவரை கைது செய்யலாம் .உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றி தெரிந்துகொண்ட பின்னர் சிங்கப்பூருக்கு சென்று ஒளிந்துகொண்டார் மைத்ரிபால.அவர் செய்த உயிர்வேள்வியே அந்த தாக்குதல்களாகும்.” என்றும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.