கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி வர்ணகுலசிங்கம் நேற்று (24) மாரடைப்பினால் உயிரிழந்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றுகின்ற அதேவேளை கரல கலாசார பீடத்தின் முன்னாள் பீடாதிபதியாகவும் கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில் அவரின் பூதவுடல் இன்று 2 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.