ஜனாதிபதியை சந்திக்க உள்ள போராளிகள் கட்சி!

K.Thulasi
K.Thulasi

போராளிகள் என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போராளிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தலைமைத்துவ சபைக்குள் ஜனநாய போராளிகள் கட்சியும் இருக்கின்றது.

போராளிகளின் கைகளில் அதிகாரம் வரும் வரை முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களிற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ் தலைமைகள் உதாசீனமாக செயற்படுவது தொடரத்தான் போகின்றது.

ஆகவே எதிர்வருகின்ற காலத்தில் போராளிகளின் ஜனநாயக வெற்றி முன்னாள் போராளிகள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.