தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைக் கூட்டம்

08 df
08 df

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ .சேனாதிராஜா தலைமையில் நேற்று பம்பலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் பொதுத்தேர்தல், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதிப் பகுதியில் பொதுத்தேர்தல் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில் இம்முறை கொழும்பிலும் களமிறங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.