ஆசிரிய நியமனங்களை வலியுறுத்தி ஆளுநரிடம் கோரிக்கை

anithan1
anithan1

மட்டக்களப்பில் உள்ள அனைத்துப் பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்க உள்ளதாக மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் அணிதன் நேற்ற (23) தெரிவித்தார்.

இந்நிலையில் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் நியமனங்களை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக காந்தி பூங்காவில் கையெழுத்து கையெழுத்து வேட்டை இடம்பெற்றிருந்தது.

மூன்று ஆவணங்களில் கையெழுத்திட்டு அவை ஆளுநர் உட்பட அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்த ஆவணங்களில் கையெழுத்திட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரிக்கை முன்வைக்க உள்ளதாக பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.