இரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை – மக்கள் விசனம்

thaumapuram hospital
thaumapuram hospital

கிளிநொச்சி தருமபுரம் பிரதேச வைத்தியசாலையானது இரவு வேளைகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் மூடப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இரவு வேளைகளில் அவசர சிகிச்சைகளுக்காகச் செல்லும் நோயாளர்கள் குறித்து அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அங்கு இரவில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களுக்கு மறுநாள் காலையிலேயே சிகிச்சையளிப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவிற்கு வருகைதரும் நோயாளர்களை வைத்தியர்கள் சரியாக பார்வையிடுவதில்லை எனவும் நோயாளி நோயை கூறுவதற்கு முன்பாகவே வைத்தியர் மருந்துச்சீட்டை வழங்குவதாகவும் நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.